Tamil Chat Room

Create a Meebo Chat Room

சினிமா விமர்சனம்

கள்ளக் காதல் கதை: நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்




சென்னை: சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் கள்ளக் காதலில் ஈடுபடும் மருமகள் கேரக்டரில் நடித்த அனகாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

நாடோடிகள், கோரிப்பாளையம் ஆகிய படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படம் சிந்து சமவெளி. மாமனார், மருமகள் இடையிலான கள்ளக் காதலை மையமாகக் கொண்ட விவகாரமான இந்தப் படத்தை சாமி இயக்கியுள்ளார்.

இதையடுத்து சாமிக்கும் தயாரிப்பாளருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு சாமியின் சென்னை வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. அவரது கார் உடைத்து நொறுக்கப்பட்டது.

இந் நிலையி்ல் இந்தப் படத்தில் மருமகளாக நடித்த அனகாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

அவர் கூறுகையி்ல், எனக்கு பலரிடமிருந்தும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பதற்காக, சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டருக்கு சென்று இருந்தேன். அப்போது சில பெண்கள் என்னை திட்டினார்கள்.

மேலும் கடந்த 2 நாட்களாக, போனிலும் மிரட்டல்கள் வருகின்றன. தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மாமனார்-மருமகள் இடையே கள்ள உறவு இருப்பது போன்ற கதையில் நடித்த உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

நான் ஒரு நடிகை. டைரக்டர் எப்படி நடிக்க சொல்கிறாரோ, அப்படி நடிக்கிறேன். மாமனார்-மருமகள் இடையே உறவு இருப்பது போல் கதை அமைந்திருந்தாலும், அந்த உறவினால் ஒரு குடும்பமே அழிந்து போவது போலத் தான் படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்றார்.

இவருக்கு உண்மையிலேயே மிரட்டல் வந்ததா அல்லது இது படத்தை ஓட வைக்க நடத்தப்படும் 'பப்ளிசிட்டி ஸ்டண்டா' என்று தெரியவில்லை.

அமலா பால் என்ற பெயரில் வீரசேகரன் படத்தில் அறிமுகமானவர் தான் இந்தப் படத்தில் தனது பெயரை அனகா என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்!

சிந்து சமவெளி படத்தைப் பார்த்த சென்னை மண்டல சென்சார் சிறிய தணிக்கைக்குப் பிறகு ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் படத்தை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.

இவர் இயக்கிய முதல் படம் , 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.

இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

No comments: