Tamil Chat Room

Create a Meebo Chat Room

விளையாட்டு

ஆசிய கோப்பையில் சூதாட்டமா? சல்மான் பட், அக்மலிடம் செல்போன் ஆதாரங்களை கேட்கிறது ஐ.சி.சி.

லண்டன், செப்.7: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சந்தேகித்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், கம்ரான் அக்மல் ஆகியோரின் செல்போன் ஆதாரங்களை ஐ.சி.சி. கேட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. சந்தேகித்துள்ளது.

ஆசிய கோப்பையின்போது சல்மான் பட், கம்ரான் அக்மல் ஆகியோர் யாரிடம் எல்லாம் செல்போனில் பேசினார்கள் என்பது குறித்த விவரங்களை அறிய அவர்களின் செல்போன் ஆதாரங்களை ஐசிசியின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கேட்டுள்ளது. இதற்கு இரு வீரர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

முழு விசாரணை முடிந்த பிறகே இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள வீரர்கள் குறித்து முடிவு செய்யப்படும். சூதாட்ட புகார் தொடர்பான ஆதாரங்களை அளித்தால் விட்டுவிடுவதாக முகமது ஆமிரிடம் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டங்களில் இந்தியா மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டமா? தெரியாது என்கிறது கிரிக்கெட் வாரியம்

புதுதில்லி, செப்.7: ஐபிஎல் போட்டிகளில் தவறுகள் நடப்பது தொடர்பாக எந்தவித தகவலும் எங்களுக்கு வரவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் போன்ற தவறுகள் நடப்பதாக "தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முன்னணி பேட்ஸ்மேன் ஒருவர் சந்தேகம் எழுப்பும் வகையில் விளையாடினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு சூதாட்டம் நடப்பதாக எங்களுக்கு எந்தவிதத் தகவலும் வரவில்லை. அதுபோன்று சூதாட்டம் ஐபிஎல் போட்டிகளின்போது நடக்கவில்லை. ஐசிசி விதிகள் எதையும் நாங்கள் மீறவில்லை. மேலும் ஐபிஎல் விதிமுறைகளையும் தவறாது அமல்படுத்தினோம். ஒவ்வொரு வீரரும் கண்காணிப்பில் இருந்தனர். அப்படி ஏதாவது தவறு நடந்து இருந்தால் ஐசிசியின் ஊவல் தடுப்பு மற்றும பாதுகாப்புப் பிரிவு அதை விசாரிக்கும் என்றார் அவர். இதேபோல இந்தச் செய்திகளை ஐபிஎல் இடைக்காலத் தலைவர் சிரயு அமீனும் மறுத்துள்ளார்.


யு.எஸ். ஓபன் காலிறுதியில் பெடரர், சோடர்லிங், வோஸ்னியாக்கி


நியூயார்க், செப்.7: அமெரிக்காவில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்வீடனின் ராபின் சோடர்லிங், டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மார்டி பிஸ்ûஸ வீழ்த்தினார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஜுர்கன் மெல்ஸரைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்வீடனின் ராபின் சோடர்லிங் 6-4, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஆல்பர்ட்டை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மகளிர் பிரிவு: மகளிர் ஒற்றையர் 4-வது சுற்றில் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் மரிய ஷரபோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்லோவேகியாவின் டொமினிகா 7-5, 7-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஸ்வெட்லானாவை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். ரஷியாவின் வேரா ஸ்வோனரேவா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மார்டி பிஷ்-பாமாஸின் மார்க் ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஆர்ஜென்டீனாவின் எட்வர்டு-செபல்லோஸ் ஜோடி 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ராபர்ட்-ருமேனியாவின் டீக்கா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

மகளிர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் துல்கோ-இத்தாலியின் பென்னட்டா ஜோடி 6-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் மோனிகா- இஸ்ரேலின் ஷாகர்பீர் ஜோடியை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

ஜிம்பாப்வேயின் காரா பிளாக்-ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாஸியா ஜோடி 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ்-அன்ன லீனா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. சீன தைபேவின் யங்-ஜான்-சீனாவின் ஜி செங் ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் போலானா-குரேஷியாவின் பெட்ரா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜிம்பாப்வேவின் காராபிளாக் ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அன்னலீனா-பாமாஸின் மார்க் ஜோடியிடம் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது.

No comments: